சிங்கள இனவெறி போரை தடுத்து நிறுத்தக் கோரியும்,
தமிழீழ ஆதரவாளர்களை கோமாளிகள் என இழிவு படுத்திய
கொடுங்கோலன் ராஜபக்சே, பொன் சேகாவா கொடும்பாவி எரிப்பு!
சென்னை, டிச. 10- ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவு படுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சே மற்றும் சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.
சமீபத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், அங்கே போர் நிறுத்தம் செய்ய ‘இந்திய பிரதமர்’ மன்மோகன் சிங்கிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று இலங்கை அரசின் இராணுவ தளபதி சரத் பொன் சேகாவா திமிராக பேசியுள்ளான். இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவு படுத்துவதாகும்.
இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில் நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆணவமாகப் பேசியிருக்கிறான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள். எனவே,
* தமிழர்களை இழிவு படுத்திய சிங்கள இனவெறி அரசின் ராணுவத் தளபதி சரத் பொன் செகாவா மன்னிப்பு கோர வேண்டும்.
* சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
* தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.
* சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.
* சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
* இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூட வேண்டும்.
என வலியுறுத்தி பொன் சேகாவா, ராஜபக்சேவின் கொடும்பாவிகளை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.
10-12-2008 காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் சீராளன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன் சேகாவா ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சிங்கள அரசுக்கு எதிராகவும், இந்திய அரசு இலங்கை அரசுடனான உறவைத் துண்டிக்கக் கோரியும், போரை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட பு,இ,மு, தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.
தமிழீழ ஆதரவாளர்களை கோமாளிகள் என இழிவு படுத்திய
கொடுங்கோலன் ராஜபக்சே, பொன் சேகாவா கொடும்பாவி எரிப்பு!
சென்னை, டிச. 10- ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவு படுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சே மற்றும் சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.
சமீபத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், அங்கே போர் நிறுத்தம் செய்ய ‘இந்திய பிரதமர்’ மன்மோகன் சிங்கிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று இலங்கை அரசின் இராணுவ தளபதி சரத் பொன் சேகாவா திமிராக பேசியுள்ளான். இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவு படுத்துவதாகும்.
இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில் நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இராணுவ தளபதி பொன் சேகாவா ஆணவமாகப் பேசியிருக்கிறான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள். எனவே,
* தமிழர்களை இழிவு படுத்திய சிங்கள இனவெறி அரசின் ராணுவத் தளபதி சரத் பொன் செகாவா மன்னிப்பு கோர வேண்டும்.
* சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
* தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.
* சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.
* சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
* இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூட வேண்டும்.
என வலியுறுத்தி பொன் சேகாவா, ராஜபக்சேவின் கொடும்பாவிகளை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.
10-12-2008 காலை 11 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் சீராளன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன் சேகாவா ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். சிங்கள அரசுக்கு எதிராகவும், இந்திய அரசு இலங்கை அரசுடனான உறவைத் துண்டிக்கக் கோரியும், போரை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட பு,இ,மு, தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.
செய்தி : மணிவண்ணன்



1 comment:
Forex Trading for Beginners Online offers a convenient and accessible way for new traders to learn the fundamentals of the foreign exchange market. With online platforms, beginners can access educational resources, interactive tutorials, market analysis tools, and demo accounts to practice trading without risking real money. Learning forex online helps traders understand currency pairs, market movements, trading strategies, and risk management techniques at their own pace. Whether your goal is to build a new skill, explore financial markets, or pursue trading opportunities, online forex education provides the knowledge and confidence needed to start your trading journey and make informed decisions in the global currency market.
Post a Comment